10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

இந்த 2019 – 2020 கல்வியாண்டின் 10 மற்றும் 11 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதற்கான மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 % மதிப்பெண் அளிக்கப்படும் என்றும், மீதம் 20 % மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் 12  ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுபட்டத் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.