மழைகாலங்களில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை தவிர்க்கவும்

கோவை மாநகராட்சி

மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில்,  மருத்துவக்கழிவுகளை சிறப்பாக கையாள மேற்கொள்ளப்படும் வகையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை தவிர்த்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை பயன்படுத்துமாறு பொதுமக்களை கோவை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆகியவற்றிலிருந்து மருத்துவக்கழிவுகள் தனியாக பெறப்பட்டு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,  அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் முகக்கவசங்கள், கையுறைகள், சானிடரி நாப்கீன்கள், பேபி டைபர்கள் மற்றும் பல மருத்துவக்கழிவுகளை தனியாக ஒரு பையில் சேமித்து தெருவில் வரக்கூடிய தூய்மை பணியாளர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.