ரெட்மியின் புதிய வொயர்லெஸ் இயர்போன்

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் வொயர்லெஸ் இயர்போனை (அல்லது இயர்பட்ஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது

குறைந்த விலையில், கூடுதல் தொழில்நுட்ப வசதிகளை கொடுத்து இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோமி உருவெடுத்து வருகிறது. ஜியோமி நிறுவனம் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், டிவி உட்பட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரிசையில் வொயர்லெஸ் இயர்போனை (அல்லது இயர்பட்ஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது

ரூபாய் 1,799 மதிப்புள்ள இயர்பட்ஸுகள் மிகவும் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்றின் எடை 4.1 கிராம் ஆகும். ஒவ்வொரு இயர்பட்ஸுக்கும் தனியே 43 எம்ஏஹெச் திறன்கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 300 எம்ஏஹெச் பேட்டரி ஒன்று உள்ளது. இதனை 1.30 மணி நேரம் ஜார்ஜ் செய்தால், 12 மணி நேரங்கள் பயன்படுத்த முடியும். அத்துடன் 4 மணி நேரம் போன் பேச முடியும். ஜார்ஜ் போட்ட பின்னர் உபயோகிக்காமல் இருந்தால் 150 மணி நேரம் வரை ஜார்ஜ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாடலின் சத்தத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாத இந்த இயர்பட்ஸ் மூலம் போன்கால்களை ஏற்கலாம், தவிர்க்கலாம். அத்துடன் பாடல்களை இயக்கலாம், மாற்றிக்கொள்ளலாம், அதேசமயம் கூகுள் அஸிஸ்டன் உள்ளிட்டவற்றை இயக்கலாம்.