மருத்துவ குழுவோடு முதல்வர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் 4வது கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள  நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நோய் தொற்றின் நிலை, அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரையை மருத்துவ நிபுணர் குழு வழங்கும் என்று தகவல்.

மேலும், இதில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. அதோடு சென்னையில் வேகமாக பரவும் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளது. மருத்துவ நிபுணர் குழுவினர் உடனான சந்திப்பை தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது.