கோவையில் விமான சேவை துவக்கம்

கொரோனா பாதிப்புக்கு பின்னர், கோவையில் இன்று விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளது. கோவைக்கு வரும் பயணிகளை வரவேற்கவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினி ஸ்ப்ரே செய்யப்பட்டு, பயணிகளை பரிசோதனை செய்ய தெர்மல் தெர்மாமீட்டர், சமூக விலகலுக்கான அளவீடு, லக்கேஜ்களுக்கு கிருமிநாசினி தெளித்தல், கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கோவை விமான நிலையம் தயார் நிலையில் இயங்கிவருகிறது.

கோவை விமான நிலையத்திற்கு சென்னை, மும்பை, பெங்களூர், டில்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்து 5 இண்டிகோ விமானமும், சென்னையிலிருந்து ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானமும் இயக்க திட்டமிடப்பட்டு இன்று காலை முதல் டெல்லியிலிருந்து 54 பயணிகளுடன் கோவை வந்தடைந்தது. மேலும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, இதில் மாற்றம் இருக்கலாம் எனவும் நோய்த்தொற்று இருந்தால் அவர்களை தனிமைப் படுத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என விமான நிலையை அதிகாரிகள் தெரிவித்தனர்.