திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (18.5.2020) தலைமை செயலகத்தில், திருப்பூர் மாவட்டம், தெற்கு வட்டம், நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். உடன், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோர் உள்ளனர்.