90 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் தரும் கருவி

கொரோனா பரிசோதனைக்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜி.சி.சி பயோடெக் இந்தியா என்ற தனியார் நிறுவனம் 500 ரூபாய் மட்டுமே செலவாகும் வகையிலான கருவியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஜும்தார்  இரண்டு மாத கால ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்குப் பிறகு இந்த கிட்டை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான உதிரிபாகங்கள் அனைத்தும் தங்களின் தயாரிப்பு என்பதால், இந்த கிட்டை தயாரிக்க ஆகும் செலவு குறைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 1 கோடி சோதனை கருவிகளை உருவாக்கியுள்ளதாகவும் 40 லட்சம் இருப்பில் உள்ளதாகவும், இந்த கருவி மூலம்  பரிசோதிக்கப்பட்டால் 90 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என்று மஜும்தார் கூறினார்.

தகவல் மற்றும் படம்: https://bit.ly/3boxtNn