நல்லறம் அறக்கட்டளை சார்பில் இலவச நிவாரண பொருட்கள்

நல்லறம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியோருக்கு இலவச நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது. இதனை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் வழங்கினார். 10 நாட்களாக வழங்கப்பட்டு வரும் இந்த நிவாரண பொருட்கள் மாநகராட்சி பகுதிக்கு உற்பட்ட அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு 500 முதல் 600 ஏழைமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு, முககவசம், நாப்கின் உட்பட 31  அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கேத்ரின் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன், கோவை மாவட்ட கணக்கு குழு முன்னாள் தலைவர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.