ஜெ.ஆர்.டி ரியல்டர்ஸ் – ன் நிறுவன அலுவலக திறப்பு விழா

கோவை ஜெ.ஆர்.டி ரியல்டர்ஸ் – ன் பெருநிறுவன அலுவலக திறப்பு விழா இன்று (15.09.17) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சுகாதார மற்றும் குடும்பநல நலங்களுக்கான மாநில முன்னாள் அமைச்சர் எஸ்.காந்திசெல்வன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

வசந்தி காந்திசெல்வன், டிஸ்டிரிக் ரெஜிஸ்டார் சி.விஜயசாந்தி, பி.மலையன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, முதல்வர் ரேகா மணிகண்டன்,  ஆசிரமம் மெட்ரிக்குலேஷன் பள்ளி அறங்காவலர் விப்ரஜா பாஷினி சௌந்தர்யா மற்றும்  ரசிய நௌசாத் இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மஹா கணபதி ஜூவல்லரி இயக்குனர் அன்பரசன், கருத்தரங்க அறையை திறந்து வைத்தார். செயலாளர், நேரு கல்வி குழுமம் டாக்டர்.பி.கிருஷ்ணகுமார், ஜே.சரஸ்வதி அம்மாள் சிலையை திறந்து வைத்தார். முதலீட்டாளர் அறையை அக்ஷயா பொறியியல் கல்லூரி நிர்வாக அறங்காவலர் அக்ஷயா எ. நாகராசன் திறந்து வைத்தார்.

கட்டட வடிவமைப்பாளர் தள அறையை கூட்டு போக்குவரத்து ஆணையர் பி.முருகானந்தம் திறந்து வைத்தார்.சட்ட மற்றும் கணக்கு பிரிவு அறையை  எச்.டி.எப்.சி துணை மேலாளர் அஜய் வர்மா திறந்து வைத்தார்.  பொறியாளர்கள் அறையை தாரணி டெவலபர்ஸ் துணை தலைவர் சி.கொங்குவேல் திறந்து வைத்தார். விருந்து அறையை ஹோட்டல் கொங்கு கிளாசிக் மற்றும் ஸ்ரீ மொபைல் உரிமையாளர் சி.நடேசன் திறந்து வைத்தார்.ஜெ.ஆர்.டி சூட் அறையை ஹரி பவன் நிர்வாக பங்குதாரர் ஆர்.பாலசந்தர் திறந்து வைத்தார். வரவேற்பு அறையை சுக்ரன் பிராப்பர்டிஸ், நிர்வாக இயக்குனர் நந்து என்கிற பத்மநாபன் திறந்து வைத்தார். காத்திருப்பு அறையை ஆடி மற்றும் ஹார்லே டேவிட்சன் மூத்த நிர்வாக அதிகாரி எஸ்.கே. அருண் திறந்து வைத்தார். ஏட்ரியம் அறையை டெக்ஸ் பம்ப்ஸ், என்.முருகன் திறந்து வைத்தார். ஹைய்டு அவே அறையை, ஜூவெல் ஒன், ஜி.விஜயகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்  ஜெ.ஆர்.டி ரியல்ட்டர்ஸ் தலைவர் டாக்டர்.ஜெ.ராஜேந்தரன், .ஆர்.டி ரியல்ட்டர்ஸ் மூத்த நிர்வாக அதிகாரி டாக்டர்.ஆர்.தீபக் விக்னேஸ்வர்  மற்றும் ஜெ.ஆர்.டி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு விருந்தினர்களை வரவேற்று சிறப்பு செய்தனர்.