தமிழகத்தில் முழு ஊரடங்கினால் கொரோனா தொற்று குறைந்துள்ளது

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் கோவையில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் குறைந்துள்ளது

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உள்ளது. நேற்று செவ்வா்க்கிழமை (28.4.2020) யாருக்கும் அறிகுறி இல்லை கோவை இ‌.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த கோவையை சேர்ந்த 3 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள்.

முன்னதாக அவர்கள் மூன்று பேரின் சளி, ரத்த மாதிரி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது, இதனால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று பேரும் 14 நாட்கள் தனிமையை கடைப்பிடிக்க வேண்டும் வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள். பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் அதுபோன்று துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்ற சமூக ஆர்வலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு நடந்த பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது இதையடுத்து அவர் நேற்று வீடு திரும்பினார்.