ராஜா ரவிவர்மா கிறுக்கலில் ஆரம்பித்த ஓவிய மாநகரம்

நாம் வீட்டில் உள்ள குழந்தைகள் தனக்கே தெரியாமல் தான் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அதனை நாம் அவர்கள் செய்யும் குறும்பாக எண்ணி அவர்களை அதட்டுவதை விட, அவர்களுக்கு சரியான வழிமுறைகளை கை நீட்டி காட்டினால் போதும். அதன் பின் அவர்களது வளர்ச்சிகான வழிமுறைகளை அவர்களே அறிந்து கொள்வார்கள். அதில் ஏதேனும் சிக்கல் நேர்ந்தால் அதை சரி செய்யும் வழியை மட்டும் காட்டுங்கள். அப்போது தான் அவர்கள் திறமையின் ஆழமும், ஆர்வமும் சுட்டிக்காட்டப்பட்டு அதனை பற்றி தெரிந்து கொள்வார்கள். குழந்தைகள் என்றும் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்களின் பாதி அறிவை பெற்று பிறந்த மனிதர்கள், அவர்களாலும் தன்னை தானே செதுக்கி கொள்ள முடியும். உதாரணமாக ரவிவர்மாவிக்கும் ஓவியம் பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆசிரியரை காட்டினார்கள். அதன் பிறகு ஓவியத்தின் மற்ற முறைகளை அவரே தேடி சென்றார், அதே போல் தான் நாம் குழந்தைகளும்.

200 ஆண்டுகளுக்கு முன்பு கடவுளை கற்சிலைகளாக தான் பார்க்க முடிந்தது. இதனையும் ஒருவர் மாற்றினார், அதுவும் பெண்கள் மற்றும் கடவுள்களை இணைந்து.
பெண்ணை கடவுளாக பாவித்தும், கடவுள்களை மனிதர்களின் ஒரு அங்கமாக கற்பனை கலந்து காட்சி படுத்தினார். சிறு வயதில் சுவர்களில் கரி கொண்டு கிறுக்கி கொண்டிருந்த ஒரு சிறுவன் தான் இதையொல்லாம் செய்தவன் அதுவும் ஓவியத்தின் மூலம்.

நாம் அறிந்த அந்த இந்தியாவின் தலைசிறந்த ஓவியர் ராஜா ரவிவர்மா இதனை செய்தது. சிறுவயதில் தொடங்கிய இந்த கலை உணர்வை உருவாக படுத்த பல்வேறு ஓவியர்களிடம் பல நுணுக்கங்களை கற்று தேர்ந்தார். இவரது படைப்புகளில் அதிகமானவை தென்னிந்திய பெண்களை கொண்டு வரையப்பட்ட மிகவும் தத்ரூபமான படங்கள் பலரின் கண்களை இமைக்க கூட மரக்கடிதத்து. பெண்களை குறிப்பாக தென்னிந்திய பெண்களின் அழகையும், அவர்களின் கலாச்சார வடிவையும் ஒரு புதிய முறையில் எடுத்து காட்டியது. அப்பொழுது இயற்கையான செடி, மரம், பூக்கள், கற்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் காலபோக்கில் மங்க ஆரம்பித்தது. இதற்கு மாற்றாகவும், மேலை நாட்டு நுட்பம் கலந்த ஒவியங்களை வாட்டர் கலர், ஆயில் கலர் போன்றவற்றை பயன்படுத்தினார். இதன் மூலம் இவர் வரைந்த ஓவியங்கள் உலக புகழ் பெற்றன. குறிப்பாக நாம் தினசரி காலண்டரில் பார்க்கும் தெய்வங்களின் படங்கள் இவரின் படங்களின் தாக்கம் தான் காரணம்.
புராண கதைகளில் ஆர்வம் கொண்ட இவர் பல ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளின் நிகழ்வுகளையும் வரைந்துள்ளார். இவர் வரைந்த பல பெண்களின் படங்களை போன்று அண்மையில் சினிமா நடிகைகள் போஸ் கொடுத்தது போன்ற படங்கள் வந்திருந்தது. இவரது கற்பனை மற்றும் திறமைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லாம்.


கிறுக்கல்களில் ஆரம்பித்த இந்த பயணம் உலக அளவில் வளர காரணம் இவரது திறமையை இவரது மாமா ராஜா ராஜாவர்மா கண்டறிந்தது அதற்கான வழிகளை காட்டியதும் தான் காரணம். சரியான வழிகாட்டுதல் இருந்தால் வெள்ளை தாளில் கிறுக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரவிவர்மா தான்.