நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

கோவை, அன்னூர் வட்டம் ஆம்போதி கிராமத்தில் இன்று (13.09.17) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன்.