கை கழுவுதல் மற்றும் தூய்மை பணிகள் குறித்து அறிவுரை

கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியியாக தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மைப்பணி ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ராவன்குமார் ஜடவத் கை கழுவுதல் மற்றும் தூய்மை பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது குறித்து அறிவுரை வழங்கினார். தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.