அலட்சியம் காட்டும் மக்கள் – மோடி கவலை

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவை மக்கள் அலட்சியப்படுத்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதன் தீவிரத்தை உணராமல், அலட்சியமாக மக்கள் வெளியே செல்கின்றனர். தயவுசெய்து வெளியே செல்லாமல், உங்களையும் பாதுகாத்து, உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். மக்கள் உரிய விதிமுறையை பின்பற்ற மாநில அரசுகள் விதிகளை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.