பாகிஸ்தானிலும் டோனி ரசிகன்!

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்கு பிறகு களத்தில் இறங்காத டோனி தற்பொழுது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ளார். இந்த போட்டிகள் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. இதனிடையே ஒரு ஆண்டு காலமாக டோனியை களத்தில் காண முடியாத டோனி, தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தார்.

மீண்டும் இவரை மைதானத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக பயிற்சி மேற்கொள்ளும் போதும் இவரை பார்க்க மைதானம் நிரம்பி வழிகிறது. இந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், பிசிசிஐ வெளியிட்ட வீரர்கள் பட்டியலில் டோனியின் பெயர் இல்லாத காரணத்தால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதனிடையே இந்தியாவின் ஐபிஎல் போன்றே பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற டி-20 போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இதில் ஒரு போட்டியை காண வந்த ரசிகர் ஒருவர் டோனியின் பெயர் மற்றும் அவரது ஜெர்சி எண்ணான 7 நம்பரும் போட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சியை அணிந்து வந்தது மைதானத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல் இவர் அதனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டோனிக்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம்முழுவதும் உள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.