எஸ்.எஸ்.பி வித்யா நிகேதன் பள்ளி ஆண்டு விழா

காளப்பட்டி நேரு நகர் எஸ்.எஸ்.பி வித்யா நிகேதன் பள்ளியின் 21-ம் ஆண்டு விழா சிஐடி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பூசாகோ தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியை தமிழ்ச்செல்வி தலைமை ஏற்று வாழ்வியலைப்பற்றி சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவின் தொடர்ச்சியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.