நதியை போல இரண்டு கரைகள் கொண்டது மனித வாழ்க்கை

 நூல் வெளியீட்டு விழாவில் தமிழருவி மணியன்

கோவை சுதந்திர வெளிச்சங்கள் அமைப்பு சார்பில் “ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்” என்ற தமிழருவி மணியனின் நூல் அறிமுக விழா நடைபெற்றது. ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின்  நிர்வாக இயக்குனர் டி.சீனிவாசன் தலைமை வகித்தார். காந்திய  மக்கள் இயக்க மாநில கொள்கை பரப்புச் செயலர் தேவராஜன் வரவேற்புரை வழங்கினார்.

நூலை பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.  கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம் மாநில துணைத்தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை, கோவை ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் பேசுகையில், நதியை போல மனிதனின் வாழ்க்கை இரண்டு கரைகளுக்கு உட்பட்டு தான் உள்ளது.அதில் பெறுவதும், தருவதும் தான் மனித வாழ்வின் இரண்டு கூறுகளாக உள்ளன என்றார்.