கோவையில் சிரிப்பு மழை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் வாய் விட்டு சிரித்தால்… நிகழ்ச்சி கோவை கிக்கானி பள்ளியில் நடைபெற்றது. இதில் நகைச்சுவை “இமயம்” புலவர்.இரெ.சண்முக வடிவேல் சிரிப்புரை வழங்கினார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிரிப்பூட்டும் வண்ணம் நிகழ்ச்சி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.