உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இத்தாலி நாட்டின் படோவா பல்கலைக்கழத்தில் இங்குள்ள மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு படோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்கள் சேர்ப்புத்துறை தலைவர் மெட்டியா குசெல்வா கலந்துகொண்டார். கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமை தாங்கினார். கல்லூரியின் வெளிநாட்டு தொடர்புகள் துறையின் தலைவர் விஷ்ணுகுமார் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு அங்கு கல்வி பயில கல்லூரியில் 80க்கும்  மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்தார்.