மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் ஷோரூம் திறப்பு

இந்தியாவின் நம்பர் 1 மல்டி  பிராண்ட் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிறுவனமான மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வில்ஸ்  நிறுவனம் கேர ‘என்’ டீ கார்சுடன் இனைந்து தனது புதிய ஷோரூமை கோவையில் இன்று திறந்தது. இந்த ஷோரூம் கோவை, ராம்நகர், மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வில்ஸ் நிறுவனத்தின் சேவை செயல்பாடு பிரிவு உதவி துணைத்தலைவர் சுனில் நாயக் கூறுகையில், மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வில்ஸ் குடும்பத்திற்கு கேர் என் டீ கார்ஸ் நிறுவனத்தை வரவேற்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகராக கோவை விளங்குகிறது. இதன் காரணமாக இங்கு மேலும் புதிய டீலர்ஷிப்களை திறபோம் என்று நம்புகிறேன். வளர்ந்து வரும் வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கு சந்தையில்  கடந்த ஆண்டில் நிலையான வளர்ச்சியை கண்டுள்ளது. புதிய கார்களுக்கான  விலையை காட்டிலும் பயன் படுத்திய கார்களை வாங்கும் போது அதன் விலை மிக்க குறைவாக இருக்கும். இதன் காரணமாக முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்று இந்நிறுவனத்தின் சேவை செயல்பாட்டு பிரிவு தென் மண்டல தலைவர் விபுல் ஜெயின் தெரிவித்தார். இது குறித்து கேரண்டி கார்ஸ் ஷோ ரூமை சேர்ந்த ராமசந்திரன் கூறுகையில்,  மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வில்ஸ் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை துறையில் ஓர் முன்னோடி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மூலம் உத்திரவாதம்மிக்க சிறந்த தரமான சான்றளிக்கப்பட்ட கார்களை விற்பனை செய்ய உள்ளோம். அனைத்து வகையான பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை, வாங்குதல், வர்த்தகம், நீதி மட்டும் காப்பீடு உள்ளிட்ட சேவைகளுக்கான அனைத்து தீர்வையும் வாடிக்கையாளருக்கு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டு, காரின் அனைத்து முக்கிய எந்திர மற்றும் மின்சாதனங்களுக்கும் வாரன்டி பர்ஸ்ட் உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த வாரன்டி 12 மாதங்கள் அல்லது 15 ஆயிரம் கிலோமீட்டர், இதில் எது முதலில் வருகிறதோ அதன் அடிப்படையில் இந்த சேவை வழங்கப்படும்.