வி.எல்.பி கல்லூரியில் பொங்கல் விழா

கோவைப்புதூரில் உள்ள வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி நிர்வாகத் தலைவர் சூர்யகுமார், கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையேற்றனர். கல்லூரி நிர்வாகத் தலைவர் சூர்யகுமார் தனது வாழ்த்துறையில் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமே என்றும் அதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்கள் விவசாயிகள் உழைப்பையும், நேர்மையையும் மதிக்க வேண்டும் என்றும் அதில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர் மாணவர்கள் நிகழ்த்திய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தனது பாராட்டுக்களையும், உற்சாகத்தையும் வழங்கினார்.

மேலும் மாணவர்கள் உரியடி, கயிறு இழுத்தல், மெஹந்தி, இளவட்டக்கல் தூக்குதல், பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்தல் மற்றும் நடனம் போன்றவற்றில் பங்கேற்றனர். பொங்கல் வைக்கும் போட்டியில் ஏறத்தாழ 300 மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமிழர்களின் அறுவடை விழாவினை மாணவர்கள் மிகவும் மகிழ்வுடன் கொண்டாடினர்.