அமெரிக்காவின் பொதுப்பணித்துறை இயக்குநர் ஆகும் முதல் இந்தியர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹிஸ்டன் நகரின் பொதுப்பணித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் முதல் இந்தியர் கருண் ஸ்ரீராமா.

ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட ஸ்ரீராம உஸ் மானியா பல்கலைக்கழகத்தில் கட்டிட பொறியியலில் தனது இளநிலை பட்டத்தை பெற்றார். ரூர்க்கி பல்கலைக்கழகத்தில், நிலநடுக்க பொறியியலில் தனது முதுநிலை பட்டத்தை பெற்றார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர், எம்பிஏ மற்றும் கட்டிட பொறியியலில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். கட்டுமானத் துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் அவர்.

டெக்சாஸ் மாகாணம் ஹிஸ்டன் நகரின் பொதுப்பணித் துறை சுமார் ரூ.13,400 கோடி பரிவர்த்தனை உள்ள துறை ஆகும்.  இந்த துறையில் 4000 மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்தத் துறையின் இயக்குநராக உள்ள டேல் ருதிக், விரைவில் ஓய்வு பெற உள்ளார். இந்த பதவிக்கு இந்திய-அமெரிக்கரான கருண் ஸ்ரீராமாவை (53) நியமிக்கப்படுவார்.

இந்த நியமனத்துக்கு ஹுஸ்டன் நகர கவுன்சில் ஒப்புதல் வழங்கி விட்டால், ஸ்ரீராமா வரும் ஏப்ரல் 3-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார். இதன்மூலம் இந்தப் பதவியைப் பிடித்த முதல் ஆசியர் என்ற பெருமை இவருக்குக் கிடைக்கும்.