மோகன சுந்தரத்திற்கு ‘நகைச்சுவை செம்மல்’ விருது

கொசினாவின் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம் கோ இந்தியா அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர்கள் மோகன சுந்தரம் கலந்து கொண்டு ‘வாழ வழி வகுப்போம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினருக்கு ‘நகைச்சுவை செம்மல்’ விருதினை கொசினா குழுவினர் வழங்கி கௌரவித்தனர். மேலும் இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் சரவணன், செயலாளர் விஜயகுமார், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஆழ்வார்பாபுஜி, துணைத்தலைவர் குருபிரசாத், இரண்டாம் துணைத்தலைவர் பிரபாகரன், மக்கள் தொடர்பு அலுவலர் ராமச்சந்திரன், உடனடி முன்னாள் தலைவர் மோகன்ராஜ் மற்றும் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.