பெண்களுக்கான கபடி போட்டி

கேபிஆர் குழுமத்தின் மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் குழுவினருக்கு இடையேயான ஸ்ரீ பழனிசாமி கவுண்டர் – செல்லம்மாள் நினைவு கபடி போட்டி நடைபெற்று வருகிறது.


மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் பெண்களுக்கான போட்டி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கு பெறுகின்றன. கிராம திருவிழா போல் கோலாகரமாக தொடங்கப்பட்ட லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியை சிறப்பு விருந்தினர் நிர்வாக இயக்குனர் அனந்த கிருஷ்ணன் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து, டாஸ் போட்டு போட்டியை துவங்கி வைத்தார்.


மேலும் இவ்விழாவில் கேபிஆர் தொழில் நுட்ப கல்லூரி  முதல்வர் அகிலா, தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எம். நடராஜன், கலை கல்லூரி முதல்வர் பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.