பில்லபாங் இன்டர்நேஷனல் பள்ளியில் 5வது விளையாட்டு விழா

கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பில்லபாங் இன்டர்நேஷனல் பள்ளியின் ஐந்தாவது விளையாட்டு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் ஒன்றான கங்கரூ கிட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் ஐந்தாவது விளையாட்டு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவில் குழந்தைகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், நடைப் போட்டி, நண்பருடன் 50 மீட்டர் ஓட்டம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. குழந்தைகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அணி நடையில் சிறந்த அணிக்கான கோப்பையும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விளையாட்டுப் போட்டியில் குழந்தைகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.
மேலும், இவ்விளையாட்டுப் போட்டியில் சி.டி.சி, என்.சி.சி ஆபீஸர், கமாண்டர், எல்.டி.கர்னல், ராஜேஸ் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, டிரஸ்டி யமுனாசக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜார்ஜினா அவிட்டாசிம்மன்ஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.