சிங்காநல்லூர் குளம் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணி துவக்கம்

கோவை சிங்காநல்லூர் குளத்தை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12.55 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கான பூமிபூஜையை ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, கிழக்கு மண்டல உதவி ஆணையர் செல்வம், மாநகர பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் உடனுள்ளார்கள்.