முதல்வருடன் சந்திப்பு…

தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு அண்மையில் கோவையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். இதில் தேவாங்கர் சமூகத்திற்குத் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி  அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, இதுகுறித்து  அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் மாநாட்டுக் குழுவினர்கள் சந்தித்தனர்.

இதில் தேவாங்க குலகுரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி, தலைவர் சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் ஆராதனா ராஜு, புளியம்பட்டி பி.கே.ஜெகநாதன், கிரிகண்ணன், ஐஸ்வர்யா மூர்த்தி, திருப்பூர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.