ஆர்.வி.எஸ் கல்லூரி இயக்குநர் ராபின்சனுக்கு சூலூர் பசுமை நிழல் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் சூலூர் கிரேட்டர் அரிமா சங்கத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. ரத்த தானம் தேவைப்படுவோர்க்கு, தேவைப்படும் நேரத்தில் அவ்விடத்திற்கு சென்று வழங்கியும், அதிக அளவில் ரத்ததான முகாம்கள் நடத்தியதற்கும், சூலூர் வனம் ஒன்று மற்றும் இரண்டில், சிறப்பாக களப்பணி ஆற்றியதற்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், நினைவு பரிசு வழங்கப்பட்டது.