மதுபானக் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபானக் கடைகளும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகளும் வரும்  10.11.2019 (ஞாயிற்றுக்கிழமை) மிலாதுன் நபி தினத்தன்று மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.