யூகோ வங்கியின் “லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி”

கோவை மண்டல யூகோ வங்கியின் சார்பில் லஞ்சத்திற்கு எதிராக “லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது. இப்பேரணியை கோவை மண்டல யூகோ வங்கியின் மண்டலத் தலைவர் மற்றும் துணைப் பொது மேலாளர் நாகரத்னா துவக்கி வைத்தார். இப்பேரணி கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு துவங்கி திருச்சி சாலை வழியாக யூகோ வங்கியின் மெயின் அலுவலகம் முன்பு வரை பேரணி சென்றது. இதில் யூகோ வங்கியின் உதவிப் பொது மேலாளர்கள் குழந்தைவேல், கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.