கே.பி.ஆர் மாணவர்களின் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி

கோவை கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின உறுதி மொழியேற்பு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் எஸ்.பாலுசாமி உறுதி மொழியினைக் கூற மாணவர்கள் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணும் பொருட்டு உறுதி ஏற்றுக்கொண்டனர், பல் துறைப் பேராசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.