டேபிள் டென்னிஸில் சாம்பியன் பட்டத்தினை வென்ற ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி

அண்ணாப்  பல்கலைக்கழக  ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி  சாம்பியன் பட்டத்தினை வென்றது.

அண்ணாப்  பல்கலைக் கழகம், 10-வது மண்டலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின்,  ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியியனை, கோவை கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

இதன் இறுதிப்  போட்டியில் குனியமுத்தூர்  ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மட்டும் தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன் பட்டத்தினை வென்றது. இரண்டாம் இடத்தினை கற்பகம் பொறியியல் கல்லூரி, மூன்றாம் இடத்தினை கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நான்காம் இடத்தினை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு போட்டிகளை நடத்திய கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மணிமாறன் கோப்பைகளை வழங்கினார்.

முதல் மற்றும் மூன்றாம் இடத்தினைப் பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் அணியினரை இக் கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், முதல்வர்கள் ஜேனட், சீனிவாசன் ஆளவந்தார், விளையாட்டு துறை இயக்குனர்கள் சுரேஷ்குமார், மாரிச் செல்வம் உட்பட பலர் பாராட்டினார்கள்.