சர்வதேச உணவு தினம்

டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச உணவு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பங்கேற்று தங்களால் இயன்ற உணவுப்பொருட்களை வழங்கினர். இந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், ஆதரவற்றோர் இல்லம் ஆகிய இடங்களுக்குச் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினர். மேலும் மாணவர்கள் உணவுப்பொருட்களின் முக்கியத்துவத்தை குறித்தும், உணவுப் பொருட்களை வீண்  செய்வதை தவிர்க்கவும் வலியுறுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை  கல்லூரி முதல்வர் வே.சுகுணா அவர்களது தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.