கிராம மக்கள் நலனுக்காக நூலகம் மற்றும் கணினி சேவை

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில் நூலகம் மற்றும் கணினி சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் கிராம மக்களின் நலனுக்காக ராயகவுண்டனூர் கிராமத்திற்கு நூலகம் மற்றும் கணினி சேவை மையம் கல்லூரியின் செயலர் சி.ஏ.வாசுகி தலைமையில் துவங்கப் பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் மக்கள் சேவை மையத்தின் தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் ஆறுச்சாமி, முதன்மை செயல் அதிகாரி சின்னுசாமி, முதல்வர் லட்சுமணசாமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வேல்முருகன், உன்னத் பாரத் அபியான் திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.