தீபாவளி முதல் லட்டு பிரசாதம்

மதுரை மண்ணில் ஏகப்பட்ட வரலாறுகள் இருந்தாலும், மதுரை மாநகரின் அடையாளமாய் திகழும் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வரும் தீபாவளி முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என்று தக்கார் கருமுத்து கண்ணன் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு பிரசாதம் வழங்கப்படுகிறது.  இது வரை பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிருதம், திருப்பதியில் லட்டு என வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் இனி மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலும் தீபாவளி முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்படும். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுற்றுலாவுக்காகவும், ஆன்மிக பயணத்திற்காகவும் வருவோர்களுக்கு இந்த லட்டு பிரசாதத்தை கூடுதல் வரமாகவே கருதப்படும்.

Source : https://twitter.com/PTTVOnlineNews/status/1172131773066559489