கே.பி.ஆர்  கல்லூரியில் ஓணம் திருவிழா

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளின் சார்பில் ஓணம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் முதன்மை செயலர் நடராஜன், கல்லூரியின் முதல்வர் பொம்மண்ணராஜா, கே.பி.ஆர். நிறுவங்களின் பொது மேலாளர் முனுசாமி, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கேரள பாரம்பரிய உடையணிந்து கலந்துக் கொண்டனர்.

மாணவிகள் பூக்களால் கோலமிட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஓணம் பாட்டு மற்றும் செண்டை மேளத்துடம் கூடிய இசைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னர் மகாபலியை போற்றும் விதமாக “திருவாதிரை கலி ” என்ற நடனம் மாணவர்களால் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கே.பி.ஆர் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளின் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.