சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரியில் ஓணம்

சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரியில் ஓணம் நிகழ்ச்சி, கல்லூரி மாணவர்களால் கொண்டாடப்பட்டது. சங்கரா கல்வி நிறுவனங்களின் செயலர் ராமச்சந்திரன், துணைச் செயலர் கல்யாணராமன் அவர்கள், சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன், சங்கரா மேலாண்மைத்துறையின் தலைவர் பிரியா கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு ஓணம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் கல்லூரி வளாகத்தை ஒரு சிறிய கேரளமாக தோன்றும் வண்ணம் அலங்கரித்தனர். மாணவிகள் சிலர் திருவாதிரை நடனமாடி விழாவை சிறப்பித்தனர். விழாவில் சுந்தாரிக்கு பொட்டிடல் இசை நாற்காலி, உறியடி, கயிறு இழுத்தல் போன்ற பல விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் விழாவில் ஆர்வமாக கலந்து கொண்டனர். விழாவில் அனைவரும் ஓணம் சத்யா எனப்படும் மதிய உணவு வழங்கப்பட்டது.