யோகா மற்றும் தியான பயிற்சி முகாம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உயிரி தொழில்நுட்பவியல் உராய்வுத் துறையின் சார்பாக ‘யோகா மற்றும் தியான பயிற்சி முகாம்’ நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் துறைத்தலைவர் ராஜ லெட்சுமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா பேராசிரியர், ஸ்கை யோகா, சுப்ரமணியன் கலந்து கொண்டார். கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஸ்பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உதவி பேராசிரியர் மணிமேகலை சிறப்புவிருந்தினரை வரவேற்க சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இவர் யோகா மற்றும் தியானத்தின் மகத்துவத்தை குறித்து உரையாற்றினார். மேலும் யோகா பயிற்சி மற்றும் ஆசன முறைகளை மாணவர்களுக்கு கற்பித்தார். பேராசிரியர்கள் கோமதி மற்றும் முகமது ரஃபிக்கான் ஆகியோர் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியின் இறுதியாக பேராசிரியர் செந்தில்குமார் நன்றியுரையாற்றினார்.