தமிழ்நாட்டின் புதிய சின்னம் தமிழ்மறவன் பட்டாம்பூச்சி

தமிழ்நாட்டின் புதிய சின்னமாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சியை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு,  மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன.

அந்த வகையில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தையும் சின்னமாக அறிவிக்க முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து  தமிழ்மறவன் பட்டாம்பூச்சி இனத்தை தமிழ்நாட்டின் சின்னமாக அறிவித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு  கல்லோலிகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு தற்போது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.