மருத்துவ வசதிக்காக தனிச்செயலி

பேடிஎம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய செயலியாக உள்ளது. இந்த செயலி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த செயலின் மூலம் ரீசார்ஜ், மின்சார ரசீது, டிடிஎச் கட்டணம் முதலிய பல பணவர்த்தனை செய்ய முடியும். மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக தற்போது மருத்துவ வசதிக்காக இந்த பேடிஎம் புதிய செயலி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய செயலின் மூலம் மருத்துவர்களுக்கு நோயாளிகள் செலுத்தும் கட்டணம் செலுத்த வழிவகை செய்யும். அத்துடன் மருத்துவர்களிடம் முன்பதிவு செய்யும் வசதி இந்த செயலியில் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைக்கு வாங்கும் மருந்துகளுக்கு இச்செயலியின் மூலம் பணம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.