59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி

சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு 59 நிமிடங்களுக்குள் கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

தொழில்துறையினருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடவாய்ப்புள்ளது. இதன் மூலம் வங்கிகளின் வர்த்தகம் உயருவதுடன் கடனுக்கான உத்தரவாதமாக வாகனமோ வீடோ அடமானம் வைக்கப்பட்டிருக்கும்.