கர்நாடக அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,50,500 கன அடி நீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 1,50,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபிணி அணையில் இருந்து 1,25,000 கன அடி, கபினியின் துணை அணையான தாரகாவில் இருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணராஜ் சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.