தேசிய விருது பெற்ற இயக்குனர் ராமின் “தரமணி”

தேசிய விருது பெற்ற இயக்குனர் ராமின் ‘தரமணி’ திரைப்படம் வெகு நாட்களாய் வெளியீடு தேதி அறிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 11ம் தேதி படத்தை வெளியிடப்படும் என்று இயக்குனர் அறிவித்துள்ளார். தணிக்கை குழுவின் கூற்றுப்படி ஆண் மது அருந்துவது போல காட்சி இருந்தால் “U/A” சர்டிபிகேட் வழங்குவதும், பெண் மது அருந்துவது போல காட்சி இருந்தால் “A” சர்டிபிகேட் வழங்குவதும் வழக்கம். இப்படத்தில் நாயகி ஒரு காட்சியில் மது அருந்துவது போல் காட்சி இடம் பெற்றுள்ளதால் “தரமணி” “ஏ” சர்டிபிகேட் கொடுத்ததாக கூறப்படுகிறது.

நா.முத்துக்குமார் வரிகளில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஏற்கனவே அனைத்து பாடல்களும் மக்கள் மனதில் அலைப்பாயும் இந்நேரத்தில் வெளியீடு தேதி அறிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். அது மட்டுமின்றி படத்தின் சுவரொட்டிகளில் “ஆண் பிடித்தாலும் சரி, பெண் பிடித்தாலும் சரி புகையால் வருவது புற்றுநோயே”, “ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க, பாத்துக்கோ” என்று வரும் வசனங்கள் அருமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இதில் அறிமுக நாயகன் வசந்த் ரவி, நாயகிகள் ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, யுவன் இசையமைக்க, தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை Catamaran தயாரிக்க ஜே.எஸ்.கே  நிறுவனம் விநியோகிக்கிறது.