அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆசிரியர்கள் எளிய முறையில் பாடங்களை கற்பிக்கவும் பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் +1 , +2 வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி எனும் நோக்கில் சமச்சீர் கல்வி கொண்டுவந்த நிலையில், புதிய பாடத்திட்டத்தில் உள்ள QR Code ஐ பயன்படுத்தியும், இணையதள மூலம் கற்பிக்கவும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்க அலுவலர்கள், 33 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.