திருமண பரிசாக  தண்ணீர் கேன்

தண்ணீர் பிரச்சனை தமிழகம் முழுவதும் மக்கள் தினம்தினம் சந்தித்து வரும் ஒன்று. இதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது பொது மக்களாகிய நமது கடமை என்பதை மறக்கக்கூடாது. தண்ணீர் நமக்கு தற்பொழுது இருக்கிறது என்று அழற்சியதுடன் இருந்து விட்டால், நம் வருங்கால சந்ததியினர் எதிர்கொள்ளும் மிக பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என்பதை நம் நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.

இதனை மக்கள் மனதில் பதிய வைக்க சென்னை அம்பத்தூரில் நடந்த திருமண விழாவில் மணமக்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தலா 5 லிட்டர் தண்ணீர் கேன் வழங்கியுள்ளனர்.

நாம் ஒரு விழாவிற்கு செல்கிறோம் என்றால் மணமக்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கம். பரிசு என்றால், பாத்திரம், போட்டோ பிரேம், சாமி சிலை, தங்கம், வெள்ளி, போன்றவைகளை பரிசாக கொடுப்பது வழக்கம்.

ஆனால் தண்ணீர் கேன் பரிசளித்தது மணமக்கள் மட்டும் இன்றி இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும்.