மகனின் நினைவாக…

தென்னாப்பிரிக்காவில் தனது மகன் விழுந்து இறந்த பாதாள சாக்கடைக்கு மூடி தயாரித்து போட்டுள்ள தந்தை, அதில் தனது மகனின் இறுதிப் புகைப்படத்தையும் பதித்துள்ளார்.

கேப்டவுனில் வசிக்கும் டேமியன் கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது வீட்டின் முன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென தன் நண்பரைக் காண மகனை அப்படியே விட்டுவிட்டு சாலையைக் கடந்தார்.

அவரது மகன் அவர் பின் வருவதை அறியாமல் சென்ற அவர், திடீரென ஒரு சத்தம் கேட்க திரும்பி பார்த்த பொழுது அவரது மகன் அங்கு மழைநீர் தேங்கிய மூடாத பாதாள சாக்கடையில் விழுந்ததை பார்த்த தந்தை அதில் குதித்து மகனை காப்பாற்ற முயன்ற போதும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் மகன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அதன் பின் அந்த இடத்தை கடந்து செல்லும் போது எல்லாம் மகன் நினைவு அவரை வருத்தத்தில் ஆழ்த்த அந்த பாதாள சாக்கடையின் மேல் ஒரு மூடி செய்து போட்டு அதில் அவரது மகன் இறப்பதற்கு சற்று முன் தன் மகன் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்த புகைப்படத்தை அதில் பதிவிட்டதால், அதைக் காணும் போது தன் மகன் தற்போதும் தன்னை நோக்கி சிரிப்பதைப் போன்றே உணர்வதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.