வங்கிகளுக்கு புதிய விதிமுறை

ரிசர்வ் வங்கி, ஏடிஎம் இயந்திரம் தொடர்பான ஒரு அறிவிப்பு வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களை சுவரிலோ அல்லது தூணிலோ பதித்த நிலையில் வைக்கும் பணிகள் முடித்திருக்க வேண்டும். இதனை வங்கிகள் செய்ய தவறும் பட்சத்தில் அபராதம் போன்ற நடவடிக்கைள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களின் பண பாதுகாப்புக்காக 2016 ல் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரை படி இந்த அறிவிப்பு வெளியிடுப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உட்பட அதிபாதுகாப்பான இடங்களுக்கு இது தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.