கடன் செலுத்திய நடிகர்

நடிகர் அமிதாப் பச்சன் பீகாரைச் சேர்ந்த 2,100 விவசாயிகளின் கடன் தொகையை தமது சொந்த வருமானத்தில் இருந்து செலுத்தியுள்ளார்.இது குறித்து ஏற்கனேவே விவசாயிகளின் கடன் சுமையை ஏற்றுகொள்வதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள 2 ஆயிரத்து 100 விவசாயிகளின் வங்கிக் கடன்களை மகள் ஸ்வேதா, மகன் அபிசேக் பச்சன் மூலம் செலுத்தியுள்ளதாகவும், ஏற்கனேவே கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 1,398 விவசாயிகளின் கடன் தொகையையும் மகாராஷ்ட்ராவில் 350 விவசாயிகளின் கடன் தொகையையும் கொடுத்துள்ளார் . புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் அமிதாப் திட்டமிட்டுள்ளார்.

இருபவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்தால் இல்லாதவர்கள் என்ற நிலை என்றும் இருக்காது என்பதுக்கு உதாரணம் இவர்.