என்.ஜி.மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் 2ஆம் ஆண்டு துவக்க விழா

என்.ஜி.மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் 2ஆம் ஆண்டு துவக்க விழா அண்மையில் நடைப்பெற்றது. இவ்விழாவினை டாக்டர்.ஜே.கே.பெரியசாமி, எம்டி.டிஎம்,மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர், மருதாச்சலம் அடிகள், இளையபட்டம், பேரூர் மற்றும் குமர குருபர சுவாமிகள், தலைவர்,சிரவை ஆதினம், சரவணம்பட்டி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், டாக்டர்.சி.மனோகரன்,தலைவர் & நிறுவனர் என்.ஜி.மருத்துவமனை, வரவேற்புரையாற்றினார். எ.பாரி, இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ், மேற்கு மண்டலம், கோவை தலைமை வகித்தார். தேன்மொழி மனோகரன், நிர்வாக இயக்குனர், என்.ஜி.மருத்துவமனை முன்னிலை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.