நினைவாற்றலை மழுங்கடிக்கும் இன்டர்நெட்

இணையதளம், சிறுக்குழந்தை முதல்  முதிந்தோர் வரை தற்போதைய சூழ்நிலைகளில் நாள் தோறும் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். ஒரு நாள் இன்டர்நெட் சேவை இல்லையென்றால் பாதிக்குமேல் உள்ள பொது மக்கள் மனதளவில் பெரிதும் சோர்ந்து விடுகின்றனர். இன்டர்நெட் சேவை என்பது ஒரு வித போதையாக மாரி அதனை பயன்படுத்தும் மக்களை அடிமையாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்துபவர்களின்  நினைவாற்றல் பாதிக்கப்படும்  என  கண்டறிந்து உள்ளனர். இதனை சோதனை செய்வதற்காக 100க்கும் மேற்பட்டவர்களின்  நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. அவர்களது மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள், இன்டர்நெட்டில் உள்ள எண்ணற்ற ஸ்ட்ரீம்கள் உங்களின் கவனத்தை தொறந்து திசைதிருப்பி கொண்டிருக்கின்றன. இதனால் வேறு பணியில் கவனத்தை செலுத்தும் உங்கள் திறன் கணிசமாகக் குறையும். தேவையான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. நமது மூளையில் சேகரித்து  வைக்கவேண்டிய தேவை இல்லை. கூகுள் தேடலிலும் , விக்கிபிடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்கவேண்டிய தேவைகள் குறைகின்றன என உலக மனநல பத்திரிகை வெளியிட்டது. இந்த திட்டத்தின் தலைவர் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் பிர்த், இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக மாற்றியது என்பதை  பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளார்.